• home
Home » » தினை மாவு அடை

தினை மாவு அடை

தினை மாவு அடைதேவையானவை: 

தினை மாவு - ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்) 
கடுகு-சிறிதளவு 
வெங்காயம் - 2  
பச்சை மிளகாய் - 4 
கறிவேப்பிலை - சிறிதளவு  
கொத்தமல்லி - சிறிதளவு  
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  
கடலைப்பருப்பு, உளுந்து - தலா கால் கப்  
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

* கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். 

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அடை மாவில் கொட்டிக் கலக்கவும். 

* கடைசியாக அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். 

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

0 comments:

Post a Comment