• home
Home » » இளம் வயதில் பூப்பெய்துவது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்

இளம் வயதில் பூப்பெய்துவது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்

இளம் வயதில் பூப்பெய்துவது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்நம் கலாசாரத்தில், ‘ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, ‘ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். 

பருவம் அடையும்போது பால் இன ஊக்கிகள் (Sex hormones) அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மனரீதியாக சில பிரச்சனைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார். 

பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மனரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும். 

சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும். 

அவளுக்குப் புரியும் விதத்தில் சில விசயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மனரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்.

0 comments:

Post a Comment