
மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார் என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுங்கள். வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக்கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும்போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.
எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது. வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது. இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்தவிட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக்கூடாது.
ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம். அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்துவிட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம்போடலாம். அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறு.
0 comments:
Post a Comment